நாட்டில் உண்மையான பப்பு யார் என்பதை தரவுகளும் புள்ளி விவரங்களும் கூறுவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் பேசிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் சூழ்நிலையில் நேற்று மக்களவையில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, நாட்டின் பொருளாதாரம் குறித்து மத்திய பாஜக அரசை கடுமையாக சாடினார்.
2022-23 ஆம் ஆண்டிற்கான கூடுதல் மானியங்களுக்கான கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய மஹுவா, பொருளாதாரம் குறித்து மத்திய அரசு தவறான தகவல்களை அளிப்பதாக குற்றம்சாட்டினார்.
'இந்த அரசு ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் நாட்டின் பொருளாதாரம் உயர்வதாகக் கூறுகிறது, வேகமாக வளர்ந்து வரும் நாடு என்றும் அனைவருக்கும் வேலை கிடைக்கிறது, எரிவாயு சிலிண்டர்கள், மின்சாரம், வீடுகள் என அனைத்தும் மக்களுக்கு கிடைக்கிறது என்றும் தெரிவிக்கிறது. ஆனால், அடுத்த 8,10 மாதங்களில் உண்மை வெளிப்படுகிறது. இப்போது இந்த டிசம்பரில், பட்ஜெட் மதிப்பீடுகளைவிட கூடுதலாக 3.26 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக அரசு கூறுகிறது.
இதையும் படிக்க | அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அரசும் ஆளும் கட்சியும் 'பப்பு' என்ற சொல்லை உருவாக்கி, அதீத இயலாமையைக் குறிக்க, அந்த சொல்லை பயன்படுத்துகின்றன. ஆனால், உண்மையான பாப்பு யார் என்பதை இப்போது தரவுகளும் புள்ளிவிவரங்களும் கூறுகின்றன' என்றார்.
மேலும், 'அக்டோபர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 4 சதவிகிதம் குறைந்து 26 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. உற்பத்தித் துறை 5.6 சதவிகிதம் சரிந்துள்ளது. தொழில்துறை உற்பத்தி குறியீட்டின்படி, 17 தொழில் துறைகள் எதிர்மறை வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளன. ஒரு வருடத்திற்குள் அந்நியச் செலாவணி கையிருப்பு 72 பில்லியன் டாலர் குறைந்துள்ளது' என்று பட்டியலிட்டார்.
மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிகமானோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதாகக் குறிப்பிட்ட மஹுவா, இது ஆரோக்கியமான பொருளாதாரச் சூழலின் அடையாளமா? ஆரோக்கியமான வரி சூழலின் அடையாளமா? இப்போது சொல்லுங்கள் யார் பப்பு? என்று கேள்வி எழுப்பினார்.
மஹுவா மொய்த்ராவின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Mahua Moitra ji showing Govt the mirror & telling who is real Pappu pic.twitter.com/yAalGnegiW
â PUNEET VIZH (@Puneetvizh) December 14, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது - நேரலை!

நெல்லையில் இருசக்கர வாகன ஓட்டியைத் தாக்கிய திமுகவினர்! வைரல் விடியோ

உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஓ. பன்னீர்செல்வம் கைது!
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK



