ஜம்மு-காஷ்மீரில் ராணுவ மருத்துவமனை அருகே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானார்கள்.
ஜம்மு-காஷ்மீர், ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ மருத்துவமனை அருகே பயங்கரவாதிகள் இன்று அதிகாலை திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 2 பேர் பலியானார்கள்.
தகவல் அறிந்ததும் நிகழ்விடத்துக்கு காவல்துறை, பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் விரைந்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் கோரி ஜம்மு-பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலையை மறித்து உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.