தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

இந்திய ரயில்வே சமீபத்திய டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும்: முர்மு

இந்திய ரயில்வே சமீபத்திய டிஜிட்டல் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். 

News image

இந்திய ரயில்வே சமீபத்திய டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும்: முர்மு

Updated On :16 டிசம்பர் 2022, 3:42 pm IST

இந்திய ரயில்வே சமீபத்திய டிஜிட்டல் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். 

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகையில் ரயில்வேயின் பயிற்சியாளர்களிடம் பேசிய முர்மு, 

ரயிலில் பயணிக்கும் மக்கள் இனிய நினைவுகளைச் சுமந்துசெல்லும் வகையில் வசதியாகப் பயணம் செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். 

மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் முதியவர்களின் தேவைகளை கவனிக்க வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான அனுபவத்தை வழங்க வேண்டும். 

இந்திய ரயில்வே இடைவெளிகளைக் குறைப்பதிலும், அனைவரையும் உள்ளடக்கிய ஆத்மநிர்பர் பாரத என்ற கனவை நனவாக்குவதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.  

இன்று இந்தியா தேசிய மற்றும் உலக அளவில் முன்னேறி வரும் நிலையில், மக்கள் மற்றும் பொருட்களின் அதிக இயக்கத்தை நாடு காண்கிறது. இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும்.

எனவே, இந்திய ரயில்வே சமீபத்திய டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும் மற்றும் பாதுகாப்பான, நேரத்தை மிச்சப்படுத்தும், வசதியான மற்றும் உயர்தர போக்குவரத்து சேவைகளுக்கான மேம்பட்ட அம்சங்களைச் சேர்க்க புதிய வழிகளை ஆராய வேண்டும். 

ரயில்வேயில் அதிக எண்ணிக்கையிலான பெண் அதிகாரிகள் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். பெண்கள் ரயில்வே சேவைகளை அதிகம் தேர்வு செய்ய வேண்டும். இந்திய இரயில்வே நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

இந்திய ரயில்வேயின் சேவைகளை மேலும் மேலும் திறமையானதாகவும், தடையற்றதாகவும், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதை நீங்கள் இலக்காகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.