தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை: எங்கே தெரியுமா?

மத்தியப் பிரதேசத்தின், குவாலியரில் பெண் ஒருவருக்கு நான்கு கால்களுடன்கூடிய அதிசய பெண் குழந்தை பிறந்த சம்பவம் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது. 

News image
Updated On :16 டிசம்பர் 2022, 1:09 pm IST

மத்தியப் பிரதேசத்தின், குவாலியரில் பெண் ஒருவருக்கு நான்கு கால்களுடன்கூடிய அதிசய பெண் குழந்தை பிறந்த சம்பவம் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது. 

குவாலியரின் சிக்கந்தர் கம்பூ பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி குஷ்வாஹா. இவர் கமலா ராஜா மருத்துவமனையில் நான்கு கால்களுடன் கூடிய அதிசய குழந்தையைப் பெற்றெடுள்ளார். 

இதுகுறித்து ஜெயரோக்யா மருத்துவமனை குழுமத்தின் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.கே.எஸ்.தாகத் கூறுகையில், 

2.3 கிலோ எடையுடன் கூடிய பெண் குழந்தை நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.  உடல் ஊனம் உள்ளது. கூடுதல் கரு இரண்டு பகுதிகளாகப் பிரியும்போது உடல் இரண்டு இடங்களில் உருவாகிறது. இது இஸ்கியோபாகஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெண் குழந்தையின் இடுப்புக்குக் கீழே இரண்டு கூடுதல் கால்களுடன் வளர்ந்திருக்கிறது. ஆனால் இரண்டு கால்களும் செயலற்ற நிலையில் உள்ளன. 

உடலில் வேறு ஏதேனும் குறைபாடு உள்ளதா எனக் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். பரிசோதனைக்குப் பின் குழந்தை நலமாக இருந்தால் அறுவை சிகிச்சை மூலம், அந்த கால்கள் அகற்றப்படும். அதன்பிறகு குழந்தை இயல்பு வாழ்க்கையை வாழ முடியும் என்று அவர் கூறினார். 

குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர்கள் குழு கலந்தாலோசித்து வருகின்றது. பெண் குழந்தை தற்போது பூரண நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

கடந்த மார்ச் மாதத்தில் ம.பி.யில் ரத்லாமில் ஒரு பெண்ணுக்கு 2 தலைகள், 3 கைகள் மற்றும் 2 கால்களுடன் பிறந்தது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.