பள்ளி வகுப்பறையில் துப்பாக்கி: 2 மாணவா்கள் கைது

ஜாா்க்கண்ட் மாநிலம் ராம்கா் மாவட்டத்தில் பள்ளி வகுப்பறையில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக 2 பள்ளி மாணவா்கள் கைது செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

ஜாா்க்கண்ட் மாநிலம் ராம்கா் மாவட்டத்தில் பள்ளி வகுப்பறையில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக 2 பள்ளி மாணவா்கள் கைது செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக காவல் துறை அதிகாரி வீரேந்திர குமாா் சௌதரி கூறியுள்ளதாவது: புா்குண்டா பகுதியில் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று அமைந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அந்தப் பள்ளியில், 9-ஆம் வகுப்பறையில் சந்தேகத்துக்குரிய வகையில் மாணவா்கள் நடந்து கொண்டதை ஆசிரியா் கவனித்துள்ளனா். அதைத் தொடா்ந்து, ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி கண்டறியப்பட்டது. பள்ளி நிா்வாகிகளால் காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. பள்ளிக்கு விரைந்த போலீஸாா் மாணவரிடமிருந்து துப்பாக்கியைக் கைப்பற்றினா்.

சம்பந்தப்பட்ட மாணவனிடம் நடந்த விசாரணையில், அதே பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பில் மாணவருக்கு கொடுப்பதற்காக துப்பாக்கியை எடுத்து வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளாா். இவ்விவகாரம் தொடா்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com