புது தில்லி: வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் அட்டைகள் செயலற்றதாகிவிடும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எது கட்டாயமோ, அது மிகவும் அவசியம். எனவே மக்களே இன்னும் தாமதிக்காதீர்கள். இன்றே விரைந்து ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணையுங்கள் என்றும் வருமான வரித்துறை வலியுறுத்தியிருக்கிறது.
மேலும், வருமான வரித்துறை சட்டம் 1961-ன்படி, பான் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும், விதிவிலக்குப் பிரிவினராக இல்லாதபட்சத்தில் உடனடியாக 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைத்துவிடுங்கள். அவ்வாறு இணைக்கான பான் அட்டைகள், 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செல்லாததாக மாறிவிடும் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.