இந்த வார வர்த்தகத்தில் தொடர்ந்து இன்றும் பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
நேற்று(பிப்.1) 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் அறிக்கைகளும் பங்குச் சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் நேற்றைய வர்த்தகத்தைத் தொடர்ந்து இன்றும் பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
நேற்று (பிப்.1) 58,862.57 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 59,293.44 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 695.76 புள்ளிகள் 59,558.33 உயர்ந்து புள்ளிகளுடன் நிலைபெற்றது.
அதேபோல், 17,576.85 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,706.20 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 203.15 புள்ளிகள் அதிகரித்து 17,780.00 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இதனால், கடந்த 2 வாரமாக வீழ்ச்சியை சந்தித்து வந்த பங்குச் சந்தை கடந்த சில நாள்களாக எழுச்சியடைந்து வருகிறது.
இதையும் படிக்க| பொது பட்ஜெட் 2022-23: முக்கிய அம்சங்கள்