புது தில்லி: கோவா சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி அரவிந்த் கேஜரிவால் இரண்டு நாள் பயணமாக இன்று கோவா செல்கிறார்.
கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், கோவா தோ்தலை ஒட்டி, தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் இரண்டு நாள் பயணமாக இன்று வியாழக்கிழமை கோவா செல்கிறார் என்று ஆம் ஆத்மி கட்சி தலைமை தெரிவித்துள்ளது.