உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டாம் என பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.
திபியாபூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:
"மார்ச் 18-ம் தேதி ஹோலிப் பண்டிகை. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை, 10-ம் தேதி பாஜக அரசு ஆட்சிக்கு வரும், இலவச சமையல் எரிவாயு உருளைகள் மார்ச் 18-ம் தேதி உங்கள் வீடு வந்து சேரும். விவசாயிகள் யாரும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டாம்.
இதையும் படிக்க | ரேஷன் பொருள்களுடன் 1 கிலோ நெய்: அகிலேஷ் யாதவ்
சமாஜவாதி அழிக்கப்பட்டு விட்டது. 300-க்கும் மேற்பட்ட இடங்களுடனான பாஜக அரசுக்கு மேற்கு உத்தரப் பிரதேசம் அடித்தளம் அமைத்துவிட்டது. மூன்றாவது கட்ட வாக்குப்பதிவில் இந்தப் பெரும்பான்மை மேலும் பெரிதாக்கப்பட வேண்டும்."
உத்தரப் பிரதேசத்தில் 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. முதலிரண்டு கட்ட வாக்குப் பதிவுகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை வெளியிட வேண்டாம்! - ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


