தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்டம் பிப்ரவரி 11ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இரண்டாம் கட்டத் தொடர் மார்ச் 14ஆம் தேதி தொடங்கவுள்ளன.
இந்நிலையில், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை அமல்படுத்துவது குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசிக்க உள்ளனர்.
மேலும், இரண்டாம் கட்டத் தொடர், கரோனா மூன்றாம் அலையின் தற்போதைய நிலை, தடுப்பூசி செலுத்தும் பணி குறித்தும் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.