போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பட்டியலினத்தைச் சேர்ந்தவர் குதிரையில் செல்லக் கூடாதா?: ஐபிஎஸ் மணமகனின் திருமண ஊர்வலம்

ராஜஸ்தானில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் திருமண ஊர்வலத்தில் குதிரையில் செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், காவல் துறையின் பாதுகாப்புடன் திருமண ஊர்வலம் நடைபெற்றது.

News image
Updated On :20 பிப்ரவரி 2022, 4:12 am

ராஜஸ்தானில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் திருமண ஊர்வலத்தில் குதிரையில் செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், காவல் துறையின் பாதுகாப்புடன் திருமண ஊர்வலம் நடைபெற்றது.

ராஜஸ்தானில் ஆதிக்க சாதியினர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமண ஊர்வலத்தின்போது பிரச்னையில் ஈடுபடுவதால், காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்திலுள்ள சுராஜ்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் குமார் தன்வன்டா, பட்டியலினத்தைச் சேர்ந்த 26 வயதான இவர், தனது கடின உழைப்பின் மூலம் கிராமத்தின் முதல் ஐபிஎஸ் அதிகாரியாகியுள்ளார். 

இந்நிலையில், அவரது திருமணத்தையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை பலத்த காவல் துறையின் பாதுகாப்புடன் மணமகன் அழைப்பு  நடைபெற்றது.

Story image

ஏனெனில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் குதிரையில் செல்லக்கூடாது என்று அப்பகுதியிலுள்ள ஆதிக்க சமூகத்தினர் தொடர்ந்து அடிதடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

சாதி பாகுபாட்டிற்கு எதிராக குரல் கொடுத்து வரும் சுனில் குமார், தனது திருமண ஊர்வலத்தை குதிரையில் நடத்த திட்டமிட்டார். இதற்காக காவல் துறையில் உரிய பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து காவல் துறையினரின் பாதுகாப்புடன் மணமகன் ஊர்வலம் நடைபெற்றது.

இது தொடர்பாக பேசிய மணமகன் சுனில் குமார், எனது அத்தைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அப்போது எனது மாமாவை ஆதிக்க சமூகத்தினர் திருமண ஊர்வலத்தின்போது அடித்து உதைத்தனர். அவரது ஊர்வலம் குதிரையில் கூட நடைபெறவில்லை. அதோடு மட்டுமல்லாமல், அவர்கள் வசிக்கும் பகுதியைத் தாண்டி மணமகன் ஊர்வலம் நடைபெற்றாலும் அவர்கள் பிரச்னையில் ஈடுபடுவர். எங்கள் கிராமத்தில் இது தொடர்ந்து நடைபெற்று வருவதால், எனது திருமணத்தை குதிரையில் நடத்த விரும்பினேன்.

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தாலும் நான் இவ்வாறு செய்வதை எனது பெற்றோர் இதனை விரும்பவில்லை. அதனால் காவல் துறையின் பாதுகாப்பு கோரினேன். தற்போது நிலைமை மாறிவருகிறது. ஆனால் இது முழுமையாக மாற நீண்ட காலம் தேவைப்படும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.