ஆந்திர மாநில தொழில்துறை அமைச்சர் கௌதம் ரெட்டி மாரடைப்பால் காலமானார்.
ஆந்திர மாநில தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கௌதம் ரெட்டி(50). நேற்று துபையில் இருந்து ஹைதராபாத் திரும்பிய இவருக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று காலமானார். கௌதம் ரெட்டி மறைவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க- இந்தியாவில் மேலும் 16,051 பேருக்கு கரோனா
2019ஆம் ஆண்டு முதல் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் கௌதம் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.