கர்நாடகத்தில் பஜ்ரங் தள் ஆர்வலர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், ஷிவமொகாவில் நேற்று இரவு 9 மணியளவில் பஜ்ரங் தள் ஆர்வலர் ஹர்ஷா(26) மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க-தமிழக பட்ஜெட்: நிதியமைச்சர் இன்று ஆலோசனை
இதற்கிடையில், சிவமொக்கா நகரில் உள்ள சீகேஹத்தி பகுதியில் மர்ம நபர்கள் சிலர் வாகனங்களுக்கு தீவைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.