ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

பிரபல மலையாள நடிகை கே.பி.ஏ.சி. லலிதா காலமானார்

பிரபல மலையாள திரைப்பட நடிகை கேபிஏசி லலிதா(வயது 74) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு காலமானார்.

கே.பி.ஏ.சி. லலிதா

Published On :1 பிப்ரவரி 2024, 1:59 pm IST

பிரபல மலையாள திரைப்பட நடிகை கே.பி.ஏ.சி. லலிதா(வயது 74) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு காலமானார்.

கேரள மாநிலம் கொச்சினில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த லலிதா, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆலப்புலா மாவட்டத்தில் பிறந்த லலிதாவின் இயற்பெயர் மகேஷ்வரி அம்மா ஆகும். கேரள மக்கள் கலை சங்கத்தில்(கேரள பீப்பிள்ஸ் ஆர்ட்ஸ் கிளப்) முதல்முறையாக நாடகத்தில் பங்குபெற்று பின்பு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடகங்களில் லலிதா என்ற பெயரில் நடித்து வந்ததால், கேபிஏசி லலிதா என்று அழைக்கப்பட்டார்.

மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கடந்த 50 ஆண்டுகளில் 550க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது இரண்டு முறையும், கேரள மாநில விருது 4 முறையும் பெற்றுள்ளார்.

இவரின் மறைவுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.