உ.பி. பேரவைத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 53.98% வாக்குப்பதிவு

உத்தரப் பிரதேசத்தில் பேரவைத் தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 53.98 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
உ.பி. பேரவைத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 53.98% வாக்குப்பதிவு
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் பேரவைத் தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 53.98 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

உத்தர பிரதேசத்தில் 403 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே 4 கட்ட தோ்தல் நிறைவடைந்துள்ள நிலையில், 5-ஆம் கட்டமாக 61 தொகுதிகளுக்கு இன்று வாக்குபதிவு நடைபெற்றது.

மக்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக் கடமையை ஆற்றினர். 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 53.98 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காங்கிரஸின் கோட்டையாக ஒருகாலத்தில் கருதப்பட்ட அமேதி, ரேபரேலி, ராமா் கோயில் கட்டப்படும் அயோத்தி ஆகிய தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com