சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

உ.பி. பேரவைத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 53.98% வாக்குப்பதிவு

உத்தரப் பிரதேசத்தில் பேரவைத் தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 53.98 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

News image
Updated On :27 பிப்ரவரி 2022, 6:33 pm IST

உத்தரப் பிரதேசத்தில் பேரவைத் தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 53.98 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

உத்தர பிரதேசத்தில் 403 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே 4 கட்ட தோ்தல் நிறைவடைந்துள்ள நிலையில், 5-ஆம் கட்டமாக 61 தொகுதிகளுக்கு இன்று வாக்குபதிவு நடைபெற்றது.

மக்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக் கடமையை ஆற்றினர். 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 53.98 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காங்கிரஸின் கோட்டையாக ஒருகாலத்தில் கருதப்பட்ட அமேதி, ரேபரேலி, ராமா் கோயில் கட்டப்படும் அயோத்தி ஆகிய தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.