அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்துடன் யானை சவாரி செய்தார்.
மூன்று நாள் பயணமாக அசாம் சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று தேஜ்பூர் பல்கலைக்கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து இன்று காலை காசிரங்கா தேசிய பூங்காவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தந்தார்.
அங்கு தனது குடும்பத்துடன் யானை சவாரி செய்து அவர் மகிழ்ந்தார். குடியரசுத் தலைவரின் வருகையைக் கருத்தில் கொண்டு தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரி மற்றும் ஜீப் சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும் பாதுகாப்பு கருதி பூங்காவில் ஒருசில பகுதிகள் மட்டும் இரண்டு நாள்கள் மூடப்படும் என காசிரங்கா தேசிய பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!

30+ ஆகிவிட்டதா? பெண்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்!

கும்பாபிஷேகம் முதல் பட்டாபிஷேகம் வரை.. எந்த கோயிலில் என்ன விஷேசம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


