சத்தீஸ்கர் மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் சிங் தியோவுக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சத்தீஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சர் சிங் தியோ கடந்த மார்ச் மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் ‘ எனக்கு கரோனா தொற்று உறுதியானது. கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.