காஷ்மீர்: 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த இருவா் பாதுகாப்புப் படையினரால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனா்.
காஷ்மீர்: 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீர்: 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த இருவா் பாதுகாப்புப் படையினரால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனா்.

குல்காம் மாவட்டம் வோகே கிராமத்தில்  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினா் மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டது. சிறிது நேரத்தில் இந்த மோதல் முடிவுக்கு வந்தது. இதில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படை தரப்பில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பில் இருந்துகொண்டு பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவந்தவா்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. 

மேலும், குல்கம் பகுதியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com