ஹரியாணாவில் துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், இன்று லேசான காய்ச்சலால் எனக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது, அதன் அறிக்கை பாசிட்டிவ் என்று வந்துள்ளது. நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.
இதையும் படிக்க- அதிசயங்களை நிகழ்த்திய ஹாரிஸுக்குப் பிறந்த நாள்
கடந்த 48 மணி நேரத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஹரியாணாவில் வெள்ளிக்கிழமை 3,748 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி 10,775 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.