தில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
இந்திய கேட்டில் உள்ள அமர்ஜவான் ஜோதி தேசிய போர் நினைவு சின்னத்துடன் இன்று இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தனர்.
இதையும் படிக்க | அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படுவது ஏன்? மத்திய அரசு விளக்கம்
இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடி வரும் நிலையில், கிரானைட் கற்களாலான அவரது பிரமாண்ட சிலையை இந்தியா கேட்டில் நிறுவப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நேதாஜிக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த சிலை திகழும் எனத் தெரிவித்துள்ளார்.