25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசிகளை சந்தையில் விற்க அனுமதி

கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசிகளை சந்தையில் விற்க மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

Published On :1 பிப்ரவரி 2024, 1:44 pm IST

கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசிகளை சந்தையில் விற்க மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியத் தயாரிப்புகளான கோவிஷீல்ட், கோவேக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. 

இந்த தடுப்பூசிகள் அவசர கால பயன்பாட்டுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது சில கட்டுப்பாடுகளுடன் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில், 

கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசிகளை சில நிபந்தனைகளுடன் சந்தையில் வயது வந்தோருக்கு விற்பனை செய்ய மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

கோவின்(CoWIN) வலைத்தளத்தில் பதிவு செய்தல், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பாதுகாப்பு குறித்த தரவுகளை சமர்ப்பித்தல் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது' என்று பதிவிட்டுள்ளார். 

அதன்படி, மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.