பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

'புல்லி பாய்' செயலி விவகாரம்: நீரஜ் பிஷ்னோயிக்கு ஜாமின் மறுப்பு

'புல்லி பாய்' செயலியை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த நீரஜ் புஷ்னோய்க்கு தில்லி உயர்நீதிமன்றம் ஜாமின் தர மறுப்பு தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2022, 4:02 pm IST

'புல்லி பாய்' செயலியை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த நீரஜ் புஷ்னோய்க்கு தில்லி உயர்நீதிமன்றம் ஜாமின் தர மறுப்பு தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டின் தீவிரத் தன்மை மற்றும் விசாரணையின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் எந்தவித சலுகையும் வழங்க முடியாது எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 

முஸ்லிம் பெண்களை ஏலத்தில் விற்பனை செய்ய இருப்பதாகக் கூறி ஏராளமான பெண்களின் படத்துடன் புல்லி பாய் என்ற செயலி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 

 பெங்களூரைச் சோ்ந்த விஷால் குமாா் (21) என்ற பொறியியல் மாணவரை மும்பை சைபா் காவல் துறையினர் கைது செய்தனா். அவா் அளித்த தகவலின்பேரில் உத்தரகண்டைச் சோ்ந்த ஸ்வேதா சிங் (18) என்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

இதற்கிடையே, தில்லி பல்கலைக்கழகத்தின் ஜாகீா் ஹுசைன் கல்லூரியைச் சோ்ந்த மயங்க் ராவத் (21) என்ற மாணவரையும் மும்பை காவல் துறையினர் ஜனவரி 4-ஆம் தேதி கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து 20-ஆம் தேதி செயலியை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த நீரஜ் பிஷ்னோயையும் காவல் துறையினர் கைது செய்தனர். 

இந்நிலையில், நீரஜ் தரப்பில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை இன்று (ஜன.30) விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தது. 

100 பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் முஸ்லீம் பெண்களை விற்பனை செய்வதை இலக்காக வைத்து இந்த செயலி செயல்பட்டு வந்தது. வழக்கின் தீவிரத் தன்மை மற்றும் விசாரணையின் ஆரம்ப நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.