மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாளையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் தில்லியில் மரியாதை செலுத்தினர்.
நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தில்லி ராஜ்காட்டிலுள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிக்க | காந்தி நினைவு நாள்: ராகுல் மரியாதை
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி முன்னதாக காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை மெரீனா கடற்கரையில் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.