மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாளையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தில்லியில் அவரது நினைவிடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தில்லி ராஜ்காட்டிலுள்ள அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
இதன் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, மகாத்மா காந்தியின் கூற்றையும் அந்தப் பதிவில் இணைத்துள்ளார்.
இதையும் படிக்க | காந்தி நினைவு நாள்: ஆளுநர், முதல்வர் மரியாதை
ராகுல் ட்வீட்:
"வரலாற்றில் உண்மையும் அன்பும் நிறைந்த பாதை மட்டுமே வெற்றி பெற்றுள்ளதை நான் விரக்தியடையும்போது நினைவில் கொள்வேன். கொடுங்கோலர்களும், கொலைகாரர்களும் இருந்திருக்கிறார்கள். சில காலங்களுக்கு அவர்கள் வலிமையானவர்களாகத் தெரியலாம். ஆனால், இறுதியில் எப்போதுமே அவர்கள் வீழ்ந்துவிடுவார்கள். அதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்."