தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஹோர்முஸ் நீரிணை வழியாக 1 லிட்டர் எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய முடியாது: அமெரிக்காவுக்கு ஈரான் சவால்!

1 லிட்டர் எண்ணெயைக்கூட ஏற்றுமதி செய்ய முடியாது - அமெரிக்காவுக்கு ஈரான் சவால்

News image

ஹோர்முஸ் நீரிணை - IANS

Updated On :10 மார்ச் 2026, 8:51 pm IST

ஹோர்முஸ் நீரிணை வழித்தடம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்குப் பிராந்தியத்திலிருந்து 1 லிட்டர் எண்ணெயைக்கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ஈரான் சவால் விடுத்துள்ளது.

ஓமனுக்கும் ஈரானுக்கும் இடையே அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணை பகுத்யானது சர்வதேச எரிசக்தி சந்தையின் முக்கிய பகுதியாகத் திகழ்கிறது. அவ்வழித்தடம் மூடப்பட்டுள்ள நிலையில், வர்த்தகக் கப்பல் போக்குவரத்து முடங்கி கச்சா எண்ணெய் விநியோகம் உலகெங்கிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு தடைபட்டுள்ளது. இதன் எதிரொலியாக, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல், கடந்த நான்காண்டுகளில் இல்லாத அளவாக 120 டாலர் விலையை நெருங்கிவிட்டது. இதே நிலைமை நீடித்தால் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியைப் பயன்படுத்திச் செல்லும் எண்ணெய் கப்பல்கள் தாக்கப்படும் என்று ஈரான் அரசு எச்சரித்ததைத் தொடர்ந்து, ஈரான் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தால் 20 மடங்கு தீவிரமாக ஈரான் மீதான தாக்குதல் இருக்கும் என்று எச்சரித்தார்.

டொனால்ட் டிரம்ப்பை எச்சரிக்கும் விதத்தில் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு காவலர்கள் (ஐஆர்ஜிசி) வெளியிட்டுள்ள பதிவில், ‘அமெரிக்க ராணுவம் மற்றும் இஸ்ரேலின் அரசு ஆகியவற்றின் ஈரானுக்கும் அதன் உள்கட்டமைப்புகளுக்கும் எதிராக தாக்குதல் நீடித்தால், ஈரானின் பாதுகாப்புப்படைகள் இப்பிராந்தியத்திலிருந்து அமெரிக்க, இஸ்ரேல் தரப்புக்கும் அந்தத் தரப்புடனன கூட்டாளிகளுக்கும் மறுஅறிவிப்பு வரும் வரை ஒரு லிட்டர் எண்ணெய் ஏற்றுமதியைக்கூட அனுமதிக்க மாட்டோம்’ என்று தெரிவித்துள்ளது.

Summary

the armed forces of the Islamic Republic will not allow the export of even one litre of oil from the region to the hostile side - Iran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.