கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தொடர் பிரச்னைகள்... இண்டிகோ சிஇஓ ராஜிநாமா!

இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தது குறித்து...

News image

இண்டிகோ விமானம்

கோப்புப் படம்

Updated On :10 மார்ச் 2026, 1:48 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பீட்டர்ஸ் எல்பர்ஸ் தனது பதவியை இன்று (மார்ச் 10) ராஜிநாமா செய்தார்.

கடந்த சில மாதங்களாக தொழில்நுட்பக் கோளாறு, விமான சேவை ரத்து உள்ளிட்ட மிகப்பெரிய செயல்பட்டு இடையூறுகளை இண்டிகோ நிறுவனம் சந்தித்ததைத் தொடர்ந்து பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இவரின் ராஜிநாமாவைத் தொடர்ந்து இண்டிகோவின் மேலாண்மை இயக்குநராக உள்ள ராகுல் பாட்டியா இடைக்கால தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

விமான போக்குவரத்து அமைச்சகத்தின் தொடர் விசாரணைகளுக்குப் பின் பீட்டர் எல்பர்ஸ் ராஜிநாமா செய்துள்ளார்.

இண்டிகோ நிறுவனத்தின் பெயரில் இன்டர்குளோப் நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது. ராஜிநாமா தொடர்பாக இன்டர்குளோப் நிறுவனத் தலைவர் விக்ரம் சிங் மேத்தா கூறியதாவது:

''நிறுவனத்தின் கலாசாரத்தை வலுப்படுத்தவும், செயல்பாட்டு சிறப்பை மீட்டுருவாக்கம் செய்து சிறப்பான பராமரிப்பு சேவையை வழங்குவதற்கும் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக ராகுல் பாட்டியா பொறுப்பேற்றுள்ளார்.

பயணிகளிடையே நம்பகத்தன்மை ஏற்படுத்த தொழில்முறையை நேர்த்தியில் உறுதியுடன் செயல்படும் வகையில் இவரின் பணிக்காலம் இருக்கும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.