லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?
லடாக்கின் துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகத் தகவல்...


லடாக்கின் துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கின் துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா தனது பதவியை வியாழக்கிழமை (மார்ச் 5) ராஜிநாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே, மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ள நிலையில், லடாக்கின் துணைநிலை ஆளுநரும் பதவி விலகுவதாக வெளியாகும் செய்திகள் நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளன.
முன்னதாக, கவிந்தர் குப்தா லடாக்கின் துணைநிலை ஆளுநராகப் பதவியேற்ற வெறும் 9 மாதங்களில் அவர் பதவி விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...