இஸ்ரேல் - ஈரான் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் கடல்வழிப் போக்குவரத்துக்கான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றன.
இந்தியாவிலும் வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கவும் சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வணிக சிலிண்டர் விற்பனை நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வணிகம் சார்ந்த நிறுவனங்கள் கவலை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுதொடர்பாக அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்பின்னர் அவர், போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விரிவாக ஆய்வு செய்தேன்.
தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பையும் அப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் நலனையும் உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திட வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.
à®à®®à¯à®°à®¿à®à¯à®à®¾ - à®à®°à®¾à®©à¯ பà¯à®°à®¿à®©à®¾à®²à¯ தமிழà¯à®¨à®¾à®à¯à®à¯à®à¯à®à¯ à®à®±à¯à®ªà®à¯à®®à¯ பாதிபà¯à®ªà¯à®à®³à¯ à®à¯à®±à®¿à®¤à¯à®¤à¯à®®à¯, à®à®¤à¯à®à¯à®±à®¿à®¤à¯à®¤à¯ à®à®à¯à®à¯à®à®ªà¯à®ªà® வà¯à®£à¯à®à®¿à®¯ நà®à®µà®à®¿à®à¯à®à¯à®à®³à¯ à®à¯à®±à®¿à®¤à¯à®¤à¯à®®à¯ à®à®©à¯à®±à¯ விரிவா஠à®à®¯à¯à®µà¯ à®à¯à®¯à¯à®¤à¯à®©à¯. தறà¯à®ªà¯à®¤à¯ பாதிà®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³ பலà¯à®µà¯à®±à¯ வளà¯à®à¯à®à®¾ நாà®à¯à®à®³à®¿à®²à¯ வாழà¯à®®à¯ தமிழரà¯à®à®³à®¿à®©à¯ பாதà¯à®à®¾à®ªà¯à®ªà¯à®¯à¯à®®à¯ à®à®ªà¯à®ªà®à¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ à®à®¿à®à¯à®à®¿à®¯à¯à®³à¯à®³â¦ pic.twitter.com/AREsEDWLz4
— M.K.Stalin - தமிழà¯à®¨à®¾à®à¯à®à¯ தலà¯à®à¯à®©à®¿à®¯ விà®à®®à®¾à®à¯à®à¯à®©à¯ (@mkstalin) March 10, 2026
Summary
LPG Cylinder shortage: Chief Minister M.K. Stalin letter to Prime Minister Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கர்நாடகம் செல்லும் முதல்வர் விஜய்! சதிவலையில் சிக்கக் கூடாது - மு.க. ஸ்டாலின்

வினாத்தாள் கசிவு விவகாரம்: மௌனம் கலைத்த பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் நன்றி

அமெரிக்கா உடன் நீடிக்கும் போர்! ஈரானில் இறுதித் தேர்வுகள் ரத்து!

என்ன, இனி இன்ஸ்டாமார்ட்டில் எல்பிஜி சிலிண்டர் வாங்கலாமா?
விடியோக்கள்

அயோத்தி நன்கொடை திருட்டு விவகாரம்! நாடாளுமன்றத்தில் தொடரும் எதிர்க்கட்சி எம்.பிக்களின் போராட்டம்!




