தலைநகர் தில்லியில் மாசினைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு இறுதிக்குள் 35 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என தில்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது: “தில்லியை பசுமையாக மாற்ற அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. நாங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் 35 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற இலக்கினை வைத்துள்ளோம். அரசு வருகிற ஜூலை 11ஆம் தேதி முதல் “வன் மகோத்சவ்” முயற்சியின் கீழ் 15 நாட்கள் மரக்கன்றுகளை தில்லி முழுவதும் நட முடிவு செய்துள்ளது. தில்லியின் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக அரசு தொடர்ந்து உழைத்து வருகிறது. காற்று மாசுபாட்டைத் தடுக்க தில்லி அரசு எடுத்துள்ள இந்த முயற்சி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு உதாரணமாக இருக்கும். தில்லி முழுவதும் 14 இடங்களில் விதைப் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டு அவற்றின் செல்லிடப்பேசி எண் மக்களுக்கு விரைவில் வழங்கப்படும். தில்லியில் பசுமை பகுதிகளின் சதவிகிதம் 32 ஆக உள்ளது. இதனை மேலும் அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதே போல அரசு நகர விவசாயத்தினை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் தங்களது வீட்டு வளாகங்களிலேயே தங்களுக்குத் தேவையான காய்கறிகளை பயிரிட்டு வளர்க்கலாம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


