சட்டப்பேரவை உறுப்பினராக திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பதவியேற்பு

சட்டப்பேரவை உறுப்பினராக திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பதவியேற்பு

டவுன் போா்டோவலி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா இன்று சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.

டவுன் போா்டோவலி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா இன்று சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.

எளியமுறையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் ரத்தன் சக்ரவர்த்தி, அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்நிகழ்வில் துணை முதல்வர் ஜிஷ்ணு தேவ் வர்மா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

திரிபுராவில் அகா்தலா, ஜுபராஜ்நகா், சுா்மா, டவுன் போா்டோவலி ஆகிய 4 பேரவைத் தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவும், அகர்தலாவில் காங்கிரஸும் வெற்றி வாகை சூடின.  டவுன் போா்டோவலி தொகுதியில் அந்த மாநில முதல்வா் மாணிக் சாஹா வெற்றி பெற்றார்.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவா், பிப்லவ் தேவ் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ததால், அந்த மாநில முதல்வராக கடந்த மே மாதம் பதவியேற்றுக் கொண்டாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com