சிவசேனை கட்சியில் இன்னும் பல தலைவர்களும் தொண்டர்களும் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக மகாராஷ்டிர புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார்.
சிவசேனை கட்சியில் இருந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அணிதிரட்டியதன் மூலம் பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், சிவசேனை கட்சி குறித்து பேசிய ஷிண்டே, மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் முதல்வராக இருந்தபோது தனது ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்டதால், எங்கள் தலைமை சிறப்பான ஆட்சியை வழங்கும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், அதிக அளவிலான மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். சிவசேனை கட்சியைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் ஷிண்டேவுடன் தொடர்பில் இருப்பதாக பாஜக மக்களவை உறுப்பினரும் உள்துறை அமைச்சருமான ரோசாஹெப் தான்வே கூறியதைத் தொடர்ந்து, ஷிண்டே இதனைத் தெரிவித்துள்ளார்.