குரு பூர்ணிமாவை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார் பிரதமர் மோடி. குருக்களின் ஆசியுடன் இந்தியா புதிய உயரத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.
இதுகுறித்து அவர் வாழ்த்துச் செய்தியில்,
நம்மை ஊக்குவித்து, வழிகாட்டி வாழ்க்கையைப் பற்றி பலவற்றைக் கற்றுத் தந்த அனைத்து முன்மாதிரியான குருக்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் நாள்.
நமது குருக்களின் ஆசிகள் இந்தியாவை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லட்டும் என்று பிரதமர் மோடி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இவ்விழாவில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதோடு, ஒரு குரு மட்டுமே தனது சீடரை அறிவாளியாகவும், பண்புடையவராகவும் ஆக்குகிறார் என்றார்.