பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புந்தேல்கண்ட் நான்குவழிச் சாலையை திறந்துவைத்தார் பிரதமர்: பிரமிப்பூட்டும் படங்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்ட் நான்குவழிச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

News image
புந்தேல்கண்ட் நான்குவழிச் சாலை திறப்பு
Updated On :23 ஜூலை 2022, 9:41 am

PTI


உத்தரப்பிரதேச மாநிலம் பந்தேல்கண்ட் நான்குவழிச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Story image

உத்தப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்ட் விரைவு சாலையை ஜலானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத்து மக்களிடையே உரையாற்றினார்.

Story image

புந்தேல்கண்ட்டில் இன்று திறந்துவைக்கப்பட்ட நான்குவழிச் சாலை, ரூ.14,850 கோடி மதிப்பில் உத்தரப்பிரதேசத்தின் 7 மாவட்டங்கள் வழியாக 296 கிலோ மீட்டர் தொலைவுக்குக் கட்டப்பட்டுள்ளது.

Story image

இந்த நான்குவழிச் சாலைக்கு கடந்த 2020ஆம் ஆண்டு  பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது. 28 மாதங்களில் இந்தச் சாலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

Story image

ஆக்ரா -  லெக்னௌ விரைவுச் சாலையுடன் இணையும் வகையில் புந்தேல்கண்ட் விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

Story image

இது உத்தரப்பிரதேசத்தின் சித்ரகூட்,  பந்தா, மகோபா, ஹமிர்பூர், ஜலான் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும். எதிர்காலத்தில் 6 வழிச் சாலையாக மாற்றும் வகையில்  இந்தச் சாலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.