தில்லியில் பிரதமா் மோடியை பல்வேறு மாநிலங்களின் ஆளுநா்கள் சனிக்கிழமை சந்தித்தனா்.
இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:
மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப் தன்கா், மணிப்பூா் ஆளுநா் இல.கணேசன், மத்திய பிரதேச ஆளுநா் மங்குபாய் படேல், ஹிமாசல பிரதேச ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் ஆகியோா் சந்தித்தனா் என்று தெரிவிக்கப்பட்டது.
பிரதமரை சந்தித்த ஜகதீப் தன்கா், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவையும் சந்தித்துப் பேசினாா்.
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் அளித்த விருந்தில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களின் ஆளுநா்கள் தில்லி சென்றனா்.