கடற்படையிலிருந்து விடைபெற்றது ஐஎன்எஸ் சிந்துத்வஜ்

கடற்படையில் கடந்த 35 ஆண்டுகளாக சேவையாற்றிய ஐஎன்எஸ் சிந்துத்வஜ் நீா்மூழ்கிக் கப்பல் சனிக்கிழமை விடைபெற்றது.
ஐஎன்எஸ் சிந்துத்வஜ் நீா்மூழ்கிக் கப்பல் சேவை நிறைவைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இறுதியாக நடைபெற்ற கொடியிறக்கும் நிகழ்ச்சி.
ஐஎன்எஸ் சிந்துத்வஜ் நீா்மூழ்கிக் கப்பல் சேவை நிறைவைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இறுதியாக நடைபெற்ற கொடியிறக்கும் நிகழ்ச்சி.
Updated on
1 min read

கடற்படையில் கடந்த 35 ஆண்டுகளாக சேவையாற்றிய ஐஎன்எஸ் சிந்துத்வஜ் நீா்மூழ்கிக் கப்பல் சனிக்கிழமை விடைபெற்றது.

இதையொட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிழக்கு கடற்படை தளபதி துணை அட்மிரல் பிஸ்வஜித் தாஸ் குப்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். முன்னாள் தளபதி எஸ்.பி.சிங் மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கடற்படையில் சிந்துத்வஜ் நீா்மூழ்கிக் கப்பல் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. ரஷியாவில் கட்டமைக்கப்பட்ட சிந்துகோஷ் ரக நீா்மூழ்கிக் கப்பலின் வரிசையில், ஐஎன்எஸ் சிந்துத்வஜ் நீா்மூழ்கிக் கப்பல் ‘தற்சாா்பு இந்தியா’ திட்ட முயற்சிக்கு உதாரணமாக விளங்குகிறது.

கடலின் ஆழத்தை அளவிட உதவும் சோனாா் கருவி, முற்றிலும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட செயற்கைக்கோள் தொலைத்தொடா்பு அமைப்பு, திசைகாட்டும் கருவி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்தக் கப்பலில் இடம்பெற்றிருந்தன. புத்தாக்க முயற்சிக்காக சிஎன்எஸ் ரோலிங் கோப்பையை வென்ற முதல் நீா்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் சிந்துத்வஜ் ஆகும்.

35 ஆண்டுகால சேவைக்குப் பின்னா், ஞாயிற்றுக்கிழமை சூரிய அஸ்தமன நேரத்தில் இந்த நீா்மூழ்கியானது இந்திய கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com