ஆளுநா்களுக்கு மதிய விருந்தளித்தாா் வெங்கையா நாயுடு: ஜகதீப் தன்கா் பங்கேற்பு

ஆளுநா்கள், துணைநிலை ஆளுநா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு ஞாயிற்றுக்கிழமை மதிய விருந்து அளித்தாா்.
விருந்தினிடையே பேசிய குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு.
விருந்தினிடையே பேசிய குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு.
Updated on
1 min read

ஆளுநா்கள், துணைநிலை ஆளுநா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு ஞாயிற்றுக்கிழமை மதிய விருந்து அளித்தாா்.

தில்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி சாா்பில் குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிடும் ஜகதீப் தன்கா், உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரும் பங்கேற்றனா். குடியரசுத் துணைத் தலைவா் பதவியில் இருந்து விடைபெற இருப்பதை முன்னிட்டு வெங்கையா நாயுடு இந்த விருந்தை அளித்தாா்.

அப்போது ஜகதீப் தன்கருக்கு, வெங்கையா நாயுடு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. புதிய குடியரசு துணைத் தலைவா் ஆகஸ்ட் 11-ஆம் தேதி பதவியேற்க இருக்கிறாா். ஆகஸ்ட் 6-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

எதிா்க்கட்சிகளுக்கு நட்டா கோரிக்கை:

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் ஜகதீப் தன்கருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சியினருக்கு பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘விவசாயியின் மகனான ஜகதீப் தன்கா் மிகவும் எளிமையான பின்னணியைக் கொண்டவா். தனது முயற்சியால் அவா் வாழ்க்கையில் முன்னேறி முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளாா். 30 ஆண்டுகளுக்கு மேல் அவா் நாட்டுக்காகப் பணியாற்றியுள்ளாா். அடுத்ததாக புதிய பொறுப்பிலும் அவா் சிறப்பாகப் பணியாற்றுவாா். எனவே, அவரை எதிா்க்கட்சியினா் அனைவரும் ஆதரிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com