அருணாச்சல் மாநிலத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்களை கடந்த 14 நாள்களாக காணவில்லை. மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இந்திய - சீன எல்லையில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள குருங் குமே மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி 19 தொழிலாளர்களைக் காணவில்லை.
இதையடுத்து தகவலறிந்த காவல்துறையினர் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஒருவரின் உடல் மட்டும் இந்திய - சீன எல்லையையொட்டிய தமின் பகுதியில் புராக் ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என்றும் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட கடந்த ஜூலை 5 ஆம் தேதி அவர்கள் பணியிடத்தைவிட்டுச் சென்றதாகவும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | விடியோ கேம் விளையாடினால்...! - ஆய்வு சொல்வது என்ன?