நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

இந்தியா 200 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்தி சாதனை: மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து 

இந்தியாவில் 200 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்தி மற்றொரு மைல்கல்லைப் பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனா் பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image

பில் கேட

Updated On :20 ஜூலை 2022, 10:25 am IST

புது தில்லி: இந்தியாவில் 200 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்தி மற்றொரு மைல்கல்லைப் பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனா் பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டு ஒரு ஆண்டு கழித்து, நாடு 18 மாதங்களில் 200 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்தி மற்றொரு மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. 

இந்தியா மீண்டும் ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். 

இது தொடர்பாக பிரதமர் மோடி ட்விட்டரில், "இந்தியா மீண்டும் சரித்திரம் படைக்கிறது! 200 கோடி தடுப்பூசி அளவைத் தாண்டிய அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்த்துகள். இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை அளவிலும் வேகத்திலும் இணையற்றதாக மாற்ற பங்களித்தவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இது கரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்தி இருப்பதாக" மோடி தெரிவித்திருந்தார்.

சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "வரலாற்றை உருவாக்குங்கள்! பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா 200 கோடி கரோனா தடுப்பூசி இலக்கை அடைய தயாராக உள்ளது! கவுண்ட்டவுன் தொடங்குகிறது." என குறிப்பிட்டிருந்தார். 

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், செவ்வாய்க்கிழமை நாட்டில் செலுத்தப்பட்ட ஒட்டுமொத்த கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 200.33 கோடியைத் தாண்டியுள்ளது என்று கூறியிருந்தது. 

இந்நிலையில், இந்தியாவில் 200 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்தி மற்றொரு மைல்கல்லைப் பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனா் பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், "200 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி சிறந்த நிர்வாகத்தின் மற்றொரு மைல்கல்லைப் பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு  வாழ்த்துகள். கரோனா தாக்கத்தைத் தணித்ததற்காக இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய அரசாங்கத்துடனான தொடர்ச்சியான கூட்டாண்மைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்று  தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.