புதுதில்லி: காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜூலை 22-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேக்கேதாட்டு விவகாரம் குறித்து விவாதிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கா்நாடக அரசின் முடிவு உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரானது என்றும் மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 16-ஆவது கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) தில்லியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களுக்கும் ஆணையத்தின் செயலா் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளாா்.
இதையும் படிக்க: இலங்கை அதிபர் தேர்தல்: வாக்கெண்ணிக்கை தொடங்கியது
இதற்கிடையே, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்கக் கூடாது என தமிழக அரசு தொடா்ந்த வழக்கு, இன்று(ஜூலை 20 )உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் மேக்கேதாட்டு விவகாரம் குறித்து விவாதிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.