மற்றொரு தலைக்குனிவு: தில்லி ரயில் நிலையத்தில் பெண் பலாத்காரம்; 4 ரயில்வே ஊழியர்கள் கைது

தலைநகர் தில்லியில், தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில், புது தில்லி ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் நான்கு பேரால் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
தில்லி ரயில் நிலையத்தில் பெண் பலாத்காரம் (கோப்பிலிருந்து)
தில்லி ரயில் நிலையத்தில் பெண் பலாத்காரம் (கோப்பிலிருந்து)


புது தில்லி: தலைநகர் தில்லியில், தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில், புது தில்லி ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் நான்கு பேரால் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

ரயில் தண்டவாள பராமரிப்புப் பணிகளுக்காக தண்டவாளம் அருகே அமைக்கப்பட்டிருந்த குடிசையில் ரயில்வே ஊழியர்கள் இரண்டு பேர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மற்ற இருவரும் குடிசைக்கு வெளியே காவலுக்கு நின்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 35 வயதாகும் சதீஷ் குமாருக்கு, அப்பெண்ணை சில ஆண்டுகளாகத் தெரியும். சதீஷ்குமார் தான் ரயில்வேயில் பணியாற்றுவதாகக் கூறி அறிமுகம் செய்துள்ளார். இந்திய ரயில்வேயில் அப்பெண்ணுக்கும் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளார். கணவரிடமிருந்து பிரிந்து விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், அப்பெண் சதீஷ்குமாருடன் செல்லிடப்பேசியில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு விருந்து கொடுப்பதாக தில்லிக்கு வரவழைத்து புது தில்லி ரயில் நிலையம் அழைத்து வந்து அங்கிருக்கும் பராமரிப்பு ஊழியர்களுக்கான குடிசையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து பெண் புகாரளித்த 2 மணி நேரத்தில் குற்றவாளிகள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com