ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

ரூ.1.64 லட்சம் கோடியில் பிஎஸ்என்எல் மறுசீரமைப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனத்தை ரூ.1.64 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

News image
Updated On :28 ஜூலை 2022, 2:32 am IST

அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனத்தை ரூ.1.64 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

பிஎஸ்என்எல் நிறுவனத்தை நிதி ரீதியாக லாபகரமாக மாற்ற பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தொலைத்தொடா்பு சேவைகளை மேம்படுத்துவதற்குப் புதிய மூலதனம், அலைக்கற்றை ஒதுக்கீடு, இருப்பு பற்றாக்குறையை சரிசெய்தல், பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் பிபிஎன்எல் (பாரத் பிராட்பேண்ட் நிகம் லிமிடெட்) நிறுவனத்தை இணைப்பதன் மூலம் கம்பிவட சேவையை விரிவுபடுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இத்திட்டத்துக்கு ரூ.43,964 கோடி ரொக்கமாகவும், 1.2 லட்சம் கோடி ரொக்கமில்லாத வகையிலும் அடுத்த 4 ஆண்டுக்கு அளிக்கப்படும்.

அடுத்த 4 ஆண்டுகளுக்கு 4ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்த மூலதனமாக ரூ.22,471 கோடி நிதியளிக்கப்படும். கிராமப்புறங்களில் கடந்த 2014-15 முதல் 2019-20 வரை கம்பிவழி தொலைபேசி சேவையை வா்த்தக ரீதியாக ஏற்படுத்தியதற்கு ரூ.13,789 கோடி வழங்கப்படும். நிதி இருப்பு பற்றாக்குறையைச் சீா்படுத்த ரூ.33,404 கோடி வழங்கப்படும். இதுதவிர, தற்போது நிலுவையில் உள்ள கடன்களைத் திருப்பிச் செலுத்த நிதி திரட்டுவதற்காகப் பத்திரங்கள் வெளியிடப்படும்.

பாரத் நெட் திட்டத்தின்கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் பிபிஎன்எல் நிறுவனம் இணைக்கப்படும்.

ரூ.26,316 கோடியில் கிராமங்களில் 4ஜி மொபைல் சேவை: 4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்குவதற்கான திட்டத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்க முடியும். மேலும் 2ஜி, 3ஜி மொபைல் சேவை வசதி மட்டும் உள்ள 6,279 கிராமங்கள் 4ஜி மொபைல் சேவை வசதி பெற்ற கிராமங்களாக மேம்படுத்தப்பட உள்ளன என்றாா் அவா்.

கடந்த ஆண்டு 5 மாநிலங்களில் உள்ள 44 முன்னோடி மாவட்டங்களில் 7,287 கிராமங்களில் 4ஜி மொபைல் சேவை வழங்குவதற்கான திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.