பசுவின் கோமியத்திலிருந்து உரம் தயாரிக்கும் திட்டம்: எந்த மாநிலத்தில் தெரியுமா?

பசுவின் கோமியத்தில் இருந்து பூச்சுக்கொல்லிகள் மற்றும் உரம் தயாரிக்கும் திட்டத்தை சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் இன்று (ஜூலை 28) தொடங்கி வைத்தார். 
பசுவின் கோமியத்திலிருந்து உரம் தயாரிக்கும் திட்டம்: எந்த மாநிலத்தில் தெரியுமா?

பசுவின் கோமியத்தில் இருந்து பூச்சுக்கொல்லிகள் மற்றும் உரம் தயாரிக்கும் திட்டத்தை சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் இன்று (ஜூலை 28) தொடங்கி வைத்தார்.

இந்தப் புதிய திட்டத்தின் கீழ் பசுவின் கோமியம் லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.4-க்கு அரசினால் வாங்கிக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை சத்தீஸ்கர் தலைநகரில் உள்ள அவரது அரசு இல்லத்தில் இருந்து பாகெல் தொடங்கி வைத்தார். உள்ளூர் விவசாயத் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்தப் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டத்தினை அறிமுகப்படுத்திய முதல்வர் பூபேஷ் பாகெல், விழாவின் ஒரு பகுதியாக 5 லிட்டர் பசுவின் கோமியத்தை நிதி சுய உதவிக் குழுவிற்கு வழங்கினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலத்தில் கோதான் நியாய் திட்டம் தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ் பசுவினுடைய சாணம் கிலோ ரூ.2-க்கு பசு வைத்திருப்பவர்களிடம் இருந்து பெறப்பட்டது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பசுவின் கோமியத்திலிருந்து உரம் தயாரிக்கும் திட்டம் கோதான் நியாய் திட்டத்தின் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


இந்தத் திட்டம் குறித்து பேசிய பூபேஷ் பாகெல் கூறியதாவது: “கோதான் நியாய் திட்டத்தின் வளர்ச்சியினால் நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களும் இந்தத் திட்டத்தினை செயல்படுத்த ஆர்வம் காட்டுகின்றன. நீங்கள் ஏழையாக இருங்கள் அல்லது பணக்காராக இருங்கள். யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையலாம். கடந்த 2 ஆண்டுகளாக ரூ.300 கோடிக்கும் அதிகமாக பசுவின் சாணத்தினை விற்றவர்களின் வங்கிக் கணக்கிற்கு பணம் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com