அந்த மனுவில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான இரண்டு வழக்குகளை மிக விரைவாக விசாரணை செய்து, ஒரு வழக்கை ஒரே நாளில் விசாரித்து ஆயுள் தண்டனையும், இரண்டாவது வழக்கில் 4 நாள்களில் விசாரணை நடத்தி மரண தண்டனையும் விதித்ததால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனை வெள்ளிக்கிழமை விசாரணைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த மனுவில் அவர் இரண்டு வழக்குகளில் விரைவாக தீர்ப்பளித்ததை மட்டுமே சுட்டிக்காட்டியிருந்தாலும், இது ஒரு தொடர் நிகழ்வாக இருப்பதாகவும், இவர் 2014ஆம் ஆண்டு முதல் பதவி உயர்வு மறுக்கப்பட்டது முதல் இந்த விவகாரம் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.