புது தில்லி: நாடு முழுவதும் சுமார் நான்கு கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பது நீதித் துறைக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், விரைவாக தீர்ப்பளித்ததால் தான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார் பிகார் மாவட்ட நீதிபதி ஒருவர்.
மின்னல் வேகத்தில் விசாரணையை முடித்துவிட்டு தீர்ப்பளித்து, மிக விரைவாக பதவி உயர்வு கோரும் எண்ணத்தோடு செயல்பட்டதாகக் கூறி பாட்னா உயர் நீதிமன்றத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிக்க.. அர்பிதா முகர்ஜி வீடா அல்லது அலி பாபா குகையா? வியக்கும் அதிகாரிகள்
உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மாவட்ட நீதிபதி எஸ்.கே. ராய் மற்றும் அவரது தரப்பு வழக்குரைஞர் விகாஸ் சிங் ஆகியோர், இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு ஏற்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு கோரிக்கை வைத்தனர்.
அந்த மனுவில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான இரண்டு வழக்குகளை மிக விரைவாக விசாரணை செய்து, ஒரு வழக்கை ஒரே நாளில் விசாரித்து ஆயுள் தண்டனையும், இரண்டாவது வழக்கில் 4 நாள்களில் விசாரணை நடத்தி மரண தண்டனையும் விதித்ததால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனை வெள்ளிக்கிழமை விசாரணைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த மனுவில் அவர் இரண்டு வழக்குகளில் விரைவாக தீர்ப்பளித்ததை மட்டுமே சுட்டிக்காட்டியிருந்தாலும், இது ஒரு தொடர் நிகழ்வாக இருப்பதாகவும், இவர் 2014ஆம் ஆண்டு முதல் பதவி உயர்வு மறுக்கப்பட்டது முதல் இந்த விவகாரம் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடிப்பெருக்கு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புனிதநீராடி கொண்டாடிய பக்தா்கள்!

சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
ரூ.1 கோடி மதிப்பு சீனப் பட்டாசுகள் திருட்டு: தவெக நிா்வாகி உள்பட 9 போ் கைது

முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலேயே விரைவில் கைரேகைப் பதிவு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



