மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இதுவரை நல்ல விருந்தை ருசித்தார்.. இப்போது..: உத்தவ் கடும் தாக்கு

ராஜஸ்தானி, குஜராத்திகள் குறித்த மும்பை கருத்துக்கு, மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை, சிவ சேனை தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமரிசித்துள்ளார்.

News image

உத்தவ் தாக்கரே

Updated On :30 ஜூலை 2022, 9:49 am


ராஜஸ்தானி, குஜராத்திகள் குறித்த மும்பை கருத்துக்கு, மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை, சிவ சேனை தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமரிசித்துள்ளார்.

மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அண்மையில் பேசிய பேச்சுத்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கு கடும் சொற்களால் உத்தவ் தாக்கரே தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

அதாவது, மகாராஷ்டிரத்தை விட்டு ராஜஸ்தான் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த மக்கள் மும்பையை விட்டு வெளியேற முடிவெடுத்துவிட்டால், நாட்டின் வணிக தலைநகராக மும்பை இருக்காது என்று கூறியுள்ளார்.

மேலும் கோஷியாரி கூறுகையில், நான் எப்போதம் மக்களிடம் சொல்லிக் கொண்டேயிருப்பேன். மகாராஷ்டிரத்தில் குறிப்பாக தாணே மற்றும் மும்பையிலிருந்து குஜராத்தி மற்றும் ராஜஸ்தானி மக்களை வெளியேறுமாறு கூறினால், பிறகு மும்பையில் பணமே இருக்காது. அதன்பிறகு, நாட்டின் வணிக தலைநகராகவும் மும்பை இருக்காது என்று கூறியுள்ளார்.

இது குறித்து உத்தவ் தாக்கரே கூறியதாவது, மகாராஷ்டிர ஆளுநராக பகத் சிங் கோஷியாரி இதுவரை விருந்து உபசாரங்கள் என கடந்த 2.5 ஆண்டுகளாக மகாராஷ்டிரத்தின் அனைத்து விஷயங்களையும் நன்கு அனுபவித்தார், தற்போது அவர் கோல்ஹாபூர் காலணியை பார்க்கும் நேரம் வந்திருக்கிறது என்று கடும் சொற்களால் பேசியுள்ளார்.

ஆளுநர் பதவி என்பது மிகவும் மரியாதைக்குரியது. அதனை அவமரியாதை செய்ய நான் விரும்பவில்லை. ஆனால், பகத் சிங் கோஷியாரி, ஆளுநர் பதவியில் இருந்து கொண்டே, அந்தப் பதவியை அவமரியாதை செய்கிறார். மராத்தி மக்களை அவமரியாதை செய்யும் வகையில்  உள்ளது அவரது பேச்சு என்றும் உத்தவ் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.