காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிந்தியாராணி தேவிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளிப் பதக்கம் வென்ற பிந்தியாராணி தேவிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வெள்ளிப் பதக்கம் வென்ற பிந்தியாராணியின் உறுதித் தன்மையால் இந்தியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவரின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Congratulations to Bindyarani Devi for winning a Silver medal at CWG, Birmingham. This accomplishment is a manifestation of her tenacity and it has made every Indian very happy. I wish her the very best for her future endeavours. pic.twitter.com/4Z3cgVYZvv
â Narendra Modi (@narendramodi) July 31, 2022
காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் 55 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற பிந்தியாராணி தேவி, 202 கிலோ எடையைத் தூக்கினார். எனினும் அவரை விட ஒரு கிலோ எடையை கூடுதலாக தூக்கியதன் மூலம் நைஜீரியாவின் அதிஜாத் அதேனிக ஒலாரினோயே தங்கப் பதக்கம் வென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









