4 ஆண்டுகளாக ராகுலைச் சந்திக்க முடியவில்லை: மேலும் ஒரு காங்கிரஸ் மூத்த தலைவா் அதிருப்தி
கடந்த 4 ஆண்டுகளாக ராகுல் காந்தியை சந்திக்க முடியவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவாண் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.








