சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தேர்தல் பேச்சுவார்த்தை: நட்டா, ராஜ்நாத்துக்கு பாஜக அதிகாரம்

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக பிற அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜெ.பி. நட்டா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு பாஜக அதிகாரம் வழங்கியுள்ளது.

News image
Updated On :13 ஜூன் 2022, 9:32 am

DIN


குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக பிற அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு பாஜக அதிகாரம் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக, பாஜக தேசியப் பொதுச்செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற சுயேச்சை உறுப்பினர்கள் ஆகியோருடன் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இதற்கானப் பணியை அவர்கள் விரைவில் தொடங்கவுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வரும் நிலையில், பாஜக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை அமைத்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. ஜூலை 21-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.