தேர்தல் பேச்சுவார்த்தை: நட்டா, ராஜ்நாத்துக்கு பாஜக அதிகாரம்

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக பிற அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜெ.பி. நட்டா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு பாஜக அதிகாரம் வழங்கியுள்ளது.
தேர்தல் பேச்சுவார்த்தை: நட்டா, ராஜ்நாத்துக்கு பாஜக அதிகாரம்


குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக பிற அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு பாஜக அதிகாரம் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக, பாஜக தேசியப் பொதுச்செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற சுயேச்சை உறுப்பினர்கள் ஆகியோருடன் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இதற்கானப் பணியை அவர்கள் விரைவில் தொடங்கவுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வரும் நிலையில், பாஜக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை அமைத்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. ஜூலை 21-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com