ரயிலில் பயணம் செய்பவர்களுக்காக இந்திய ரயில்வே புதிய கட்டணச் சலுகைகளை அறிவித்ததாகவும் சில விதிகளையும் மாற்றியுள்ளதாகவும் கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களிலும் எண்ம ஊடகங்களிலும் தவறான தகவல்கள் பரவிவருகின்றன.
அனைத்து விதமான வகுப்புகளிலும் மூத்த குடிமக்களான 60 வயதைக் கடந்த ஆண்களுக்கு பயணச்சீட்டு கட்டணத்திலிருந்து 40 சதவீதமும் 58 வயதைக் கடந்த பெண்களுக்கு 50 சதவீதமும் சலுகை வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், இவையனைத்தும் தவறான தகவல்கள் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தட்கல் விதிகளில் மாற்றம் பற்றி வெளியான தகவல்களும் உறுதி செய்யப்படவில்லை. இதுவரை இதுபற்றி முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.