அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

அந்த நேர்மை ரொம்ப பிடிச்சிருக்குங்க.. வைரலாகும் விடுமுறைக் கடிதம்

இங்கு தன்னிடம் பணியாற்றும் ஊழியர் ஒருவர் அனுப்பிய விடுமுறைக் கடிதத்தை மேலதிகாரி, சமூக வலைத்தளத்தில் பகிர, அது வைரலாகியுள்ளது.

News image

அந்த நேர்மை ரொம்ப பிடிச்சிருக்குங்க.. வைரலாகும் விடுமுறைக் கடிதம்

Updated On :16 ஜூன் 2022, 6:11 pm IST


பொதுவாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் விடுமுறை கேட்டால் மேலதிகாரிகளுக்கு கோபம்தான் வரும். பணி பாதிக்குமே என்று. ஆனால், இங்கு தன்னிடம் பணியாற்றும் ஊழியர் ஒருவர் அனுப்பிய விடுமுறைக் கடிதத்தை மேலதிகாரி, சமூக வலைத்தளத்தில் பகிர, அது வைரலாகியுள்ளது.

ஒரு ஊழியர் தனது மேலதிகாரிக்கு அனுப்பியிருக்கும் விடுமுறை கோரிய மின்னஞ்சலின் ஸ்க்ரீன்ஷாட்டை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர, பலராலும் அது ரசிக்கப்பட்டுள்ளது.

ஷஹில் என்பவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் இந்த புகைப்படத்திலிருக்கும் மின்னஞ்சலைப் பார்க்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் தோன்றும்.

சரி அப்படி என்னதான் இருக்கிறது அந்த விடுமுறைக் கடிதத்தில் என்றால், அன்புள்ள ஐயா, இந்த மின்னஞ்சலை நான் உங்களுக்கு அனுப்புவதற்கு காரணம் என்னவென்றால், எனக்கு இன்று ஒரு நாள் விடுமுறை வேண்டும், மற்றொரு நிறுவனத்தில் நேர்காணலுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் விடுமுறை தேவைப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பகிர்ந்திருக்கும் மேலதிகாரியோ, எனது ஊழியர்கள் மிகவும் இனிமையானவர்கள், நேர்காணலுக்குச் செல்ல வேண்டும் என்று கூறி விடுமுறை கேட்டுள்ளார் என்று தனது கருத்தைப் பதிவிட்டு அந்த மின்னஞ்சலின் புகைப்படத்தை இணைத்துள்ளார்.

இதனை பலரும் தங்களது பக்கத்தில் பகிர்ந்திருப்பதோடு, பலரும் தங்கள் கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.