ஜம்மு-காஷ்மீா்: பேருந்தில் வெடிபொருள்கள் பறிமுதல் - 2 பேரிடம் விசாரணை

ஜம்மு-காஷ்மீரில் பேருந்தில் புதன்கிழமை வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் பேருந்தில் புதன்கிழமை வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக இருவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் டோடாவிலிருந்து ஜம்மு நோக்கி வந்த பேருந்தை ஜஜ்ஜாா் கோத்லி சோதனைச் சாவடியில் போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது அந்தப் பேருந்தில் வெடிபொருள் தயாரிக்கப் பயன்படும் ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்கள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

இதையறிந்த வெடிகுண்டு நிபுணா்கள் அங்கு வந்து அவற்றை செயலிழக்கச் செய்தனா். இது தொடா்பாக ஜஜ்ஜாா் கோத்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பேருந்தில் பயணித்த இருவரை பிடித்து விசாரித்து வருவதாக காவல் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com